வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரசார் வாகன பேரணி – 50க்கும் மேற்பட்டோர் கைது

 

வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரசார் வாகன பேரணி – 50க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பத்தூர்

வேளாண் சட்டத்திற்கு எதிராக சென்னை நோக்கி வாகன பேரணி சென்ற 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரசார் வாகன பேரணி – 50க்கும் மேற்பட்டோர் கைது

இதற்காக, வாணியம்பாடியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டு சென்றார். அப்போது, அனுமதியின்றி பேரணி சென்றதாக கூறி அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்தனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.