கொரோனாவுக்கு அப்புறம் இதான் முதல்முறை: வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நீண்ட நாட்களுக்கு பின் திரை முன் தோன்றிய நடிகை வனிதா விஜயகுமார், கொரோனா லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர்பாலை எளிமையாக திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி எலிசபெத் ஹெலனை விவாரத்து செய்யாமல் வனிதாவை பீட்டர்பால் திருமணம் செய்ததால் பிரச்சனை ஆனது. இந்நிலையில் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என சொல்வது போல, திருமணமான 4 மாதங்களில் நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரின் காதல் கணவர் பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், குடிபோதையில் இருந்த அவரை வனிதா அடித்து துரத்தியதாகவும் தகவல் வெளியானது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றுவருகிறார் நடிகை வனிதா.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மீண்டும் விமானத்தில் பயணம் செய்கிறேன் என்றும், ராஜ்பூர் செல்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். ராஜ்பூரில் நடைபெறும் ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளேன் என்றும் நடிகை வனிதா விஜயகுமார் அதில் குறிப்பிட்டுள்ளார்.