“இடியட்களின் உளறல்களை கண்டுக்கொள்ள நேரமில்லை” நகுலுக்கு வனிதா பதிலடி

 

“இடியட்களின் உளறல்களை கண்டுக்கொள்ள நேரமில்லை” நகுலுக்கு வனிதா பதிலடி

விஜய் டிவியின் பிக்பாஸ் 3 வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை வனிதா. அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அண்மையில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து தடாலடியாக வெளியேறி வனிதா, அந்நிகழ்ச்சியில் தனக்கு மரியாதை இல்லை எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து அந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான நகுல் பேசுகையில், அம்மன் வேஷம் போட்டுக்கொண்டு வனிதா தங்களை அசிங்கமாக பேசியதாகவும், ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்தார்.

“இடியட்களின் உளறல்களை கண்டுக்கொள்ள நேரமில்லை” நகுலுக்கு வனிதா பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை வனிதா, “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும். செட்டில் என்ன நடந்தது என்பதற்கும், அதன்பின் நடுவர்களை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

நான் என் வாழ்க்கையில் பிசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுக்கொள்ள எனக்கு நேரம் இல்லை” எனக் கூறியுள்ளார்.