அணைக்கட்டு அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து- ஆந்திராவை சேர்ந்த 3 பேர் பலி

 

அணைக்கட்டு அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து- ஆந்திராவை சேர்ந்த 3 பேர் பலி

வேலூர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கருங்கல் கம்பங்களை ஏற்றிவந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில், ஆந்திராவை சேர்ந்த 3 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீ.கோட்டா பகுதியிலிருந்து, வேலூரில் உள்ள கோழிப்பண்ணைக்கு கருங்கல் கம்பங்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் ஒன்று வந்துள்ளது. இந்த வாகனத்தில் வீ.கோட்டாவை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் கோவிந்தராஜ் ( 45), ராமன் (40), வரதப்பன் (40) ஆகியோர் கற்கள் மீது அமர்ந்தவாறு பயணித்துள்ளனர்.

அணைக்கட்டு அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து- ஆந்திராவை சேர்ந்த 3 பேர் பலி

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த எரிக்கொள்ளை பகுதியில் உள்ள திருப்பத்தில் சென்றபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. இதில் கல்தூண்கள் சரிந்ததில், கூலித் தொழிலாளிகள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் விபத்து பகுதிக்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.