சரக்கு வேன் மோதி விபத்து : அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!

 

சரக்கு வேன் மோதி விபத்து : அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சங்கீதா(46), அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில், சங்கீதா நேற்று காலை வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தில் மொரப்பூர் வழியாக காட்டனூர் நோக்கி பள்ளிக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

சரக்கு வேன் மோதி விபத்து : அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!

சங்கீதா போடம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று, இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொரப்பூர் போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்தவுடன் சரக்கு வேன் ஓட்டுநர், வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வேன் ஓட்டுனருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.