பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

 

பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

மதுரை

வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரியின் மீது வேன் மோதிய விபத்தில் பாத்திரக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(30). இவர் நேற்று முன்தினம் ஈரோட்டில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் வேனில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வேனை கிருஷ்ணகுளத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவர்ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை பகுதியில் சென்றபோது வேன் எதிர்பாராத விதமாக, சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் வேன் ஓட்டுநர் விஜய் ஆனந்த், பாத்திரக்கடை உரிமையாளர் முனியப்பன், சிவராம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் முனியப்பன் என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.