“திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே” – கவிஞர் வைரமுத்து பதிவு!

 

“திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே” – கவிஞர்  வைரமுத்து பதிவு!

பெண்களை இழிவு படுத்தி பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்றின், ஒரு பகுதி மட்டும் அண்மையில் வைரல் ஆனது. அந்த வீடியோவில், பெண்களை இழிவு படுத்தும் விதமாக திருமாவளவன் பேசியிருந்தார். ஆனால் உண்மையில், அவர் மனு ஸ்மிருதி நூலில் பெண்களை பற்றி கொச்சையாக குறிப்பிடப்பட்டிருப்பதை மக்களுக்கு விளக்கினார்.

“திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே” – கவிஞர்  வைரமுத்து பதிவு!

அந்த வீடியோவை முழுமையாக வெளியிடாமல், ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு சனாதன வாதிகள் தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவருக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், காவல்துறை போராட்டத்துக்கு தடை விதித்து பங்கேற்க வந்தவர்களை கைது செய்ததால், ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது.

“திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே” – கவிஞர்  வைரமுத்து பதிவு!

இந்த நிலையில் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “திருமா வளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே – அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே” என குறிப்பிட்டுள்ளார்.