அன்புள்ள கேப்டன்! ‘மதுரைக்காரன்’ என்ற மன உறுதி உங்களை மீட்டெடுக்கும் – வைரமுத்து ட்வீட்!

 

அன்புள்ள கேப்டன்! ‘மதுரைக்காரன்’ என்ற மன உறுதி உங்களை மீட்டெடுக்கும் – வைரமுத்து ட்வீட்!

தேமுதிக தலைவர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும் என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அன்புள்ள கேப்டன்! ‘மதுரைக்காரன்’ என்ற மன உறுதி உங்களை மீட்டெடுக்கும் – வைரமுத்து ட்வீட்!

அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமடைவார் என எதிர்பார்ப்பதாகவும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதே போல, சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜயகாந்த் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அன்புள்ள கேப்டன்! ‘மதுரைக்காரன்’ என்ற மன உறுதி உங்களை மீட்டெடுக்கும் – வைரமுத்து ட்வீட்!

அந்த வகையில், தற்போது கவிஞர் வைரமுத்துவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள கேப்டன்! உங்கள் துணிச்சலும், ‘மதுரைக்காரன்’ என்று கருதும் மன உறுதியும், மருத்துவத்தின் உறுதுணையும் இந்த நோயிலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும்; வாழ்த்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.