சின்னக் கலைவாணர்… மீள வேண்டும் : வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

 

சின்னக் கலைவாணர்… மீள வேண்டும் : வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்னக் கலைவாணர்… மீள வேண்டும் : வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

நடிகர் விவேக்கின் உடல் நலம் குறித்து பேசிய அவரது பிஆர்ஓ நிகில் முருகன், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க படுவதாகவும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்ய அக்கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென தமிழ் திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்னக் கலைவாணர்… மீள வேண்டும் : வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக் விரைவில் நலம்பெற வேண்டுமென கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்; மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.