“சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று” : கவிஞர் வைரமுத்து பாராட்டு!

 

“சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று” : கவிஞர் வைரமுத்து பாராட்டு!

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.

“சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று” : கவிஞர் வைரமுத்து பாராட்டு!

குறிப்பாக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இந்த விவகாரத்தை கையிலெடுத்த இயக்குநர் பாரதிராஜா மீராமிதுனை கண்டித்த நிலையில் நடிகர் சூர்யா பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,” எனது தம்பி தங்கைகளின் நேசமும் சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். தரம் தாழ்ந்து விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றி நம் தரத்தை நாம் குறித்துக்கொள்ள வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பதிவுக்கு பாராட்டும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், “சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை;பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.