முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து!

 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து!

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(99) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நிலைக்குறைவு காரணமாக இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு ஆளுநர் தமிழிசை, நடிகர் சிவக்குமார், ஓபிஎஸ், வைகோ, எம்.பி ரவிக்குமார், கனிமொழி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து!

அந்த வகையில், ‘கி.ரா மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களில் ஒன்று இழந்து தேடுகிறாள். கரிசல் இலக்கியமும் இந்த மண்ணும் தமிழ் உள்ளவரை அவரது புகழ் வாழ்வோம் என இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து!

இந்த நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ரா அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுமென அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கி.ரா வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று. அவரது மறைவால் இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது. அவர் மறைவுக்கு அரசு மரியாதை அறிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அரசு அவருக்கு எதிர்காலத்தில் நினைவுமண்டபம் எழுப்பும் என்று நம்புகிறோம். கி.ரா தமிழில் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.