கோவிஷீல்டு தடுப்பூசி விலை திடீர் உயர்வு… இதெல்லாம் நல்லத்துக்கில்ல – எச்சரிக்கும் வைகோ!

 

கோவிஷீல்டு தடுப்பூசி விலை திடீர் உயர்வு… இதெல்லாம் நல்லத்துக்கில்ல – எச்சரிக்கும் வைகோ!

கொரோனா தடுப்பூசிகளை இவ்வளவு நாட்களும் மத்திய அரசே கொள்முதல் செய்து வந்தது. தற்போது மாநில அரசுகளும் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் சீரம் நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கான விலையை இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை திடீர் உயர்வு… இதெல்லாம் நல்லத்துக்கில்ல – எச்சரிக்கும் வைகோ!

தற்போது இதைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், கரோனா கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வருவது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை திடீர் உயர்வு… இதெல்லாம் நல்லத்துக்கில்ல – எச்சரிக்கும் வைகோ!

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயிக்கும் போக்கு நல்லதல்ல. கோடிக்கணக்கான மக்கள் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பெற்று, அதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் வெளிச் சந்தையிலும் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வருவது ஆபத்தாகும்.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை திடீர் உயர்வு… இதெல்லாம் நல்லத்துக்கில்ல – எச்சரிக்கும் வைகோ!

கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் விலையை இரு மடங்கு உயர்த்தி இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முனைய வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பெரும் கேடு விளைவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.