தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக- வைகோ

 

தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக- வைகோ

தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அழகர்கோவில்சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்துகொண்டு நிதி வழங்கினார். கலந்துகொண்டு பேசிய அக்கட்சிப்பொதுச்செயலாளர் வைகோ, “சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களே நமக்கு கிடைக்க கூடும், அதைபற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். பொதுத்தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் இப்போது இல்லை. திமுக கூட்டணியில் நமக்கு குறைந்த இடங்களே கிடைக்கும்.

தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக- வைகோ

தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக. நம்மிடம் பணம் இல்லை. ஆனால், லட்சியங்களுக்காக, கொள்கைகளுக்காக போராடும் எண்ணம் இருக்கிறது. தொண்டர்களாக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் எதனையும் எதிர்பார்த்து இந்த கட்சியில் இருக்கவில்லை.” எனக் கூறினார்.