கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு வைகோ மலர்தூவி மரியாதை!

 

கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு வைகோ மலர்தூவி மரியாதை!

திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. இன்று காலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதுமட்டுமில்லாமல், மாவட்டந்தோறும் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு வைகோ மலர்தூவி மரியாதை!

அதே போல இன்றைய தினம், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் உதவித்தொகை, கொரோனா நிவாரண உதவியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 பொருட்கள் உள்ளடக்கிய மளிகை பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார். கருணாநிதியின் பிறந்தநாளை அவரது மகன் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக கொண்டாடி வரும் அதே வேளையில், பல அரசியல் தலைவர்கள் கருணாநிதியை நினைவுக் கூறுகிறார்கள்.

அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக, மதிமுக பிரமுகர்கள் உடனிருந்தனர்.