பக்தர்கள் யாரும் இல்லாமல் திருச்செந்தூரில் நடந்த வைகாசி விசாக திருவிழா!

 

பக்தர்கள் யாரும் இல்லாமல் திருச்செந்தூரில் நடந்த  வைகாசி விசாக திருவிழா!

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பக்தர்கள் யாரும் இல்லாமல் திருச்செந்தூரில் நடந்த  வைகாசி விசாக திருவிழா!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக கொரோனா அச்சம் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.