தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை – ரயில் போக்குவரத்து பாதிப்பு

 

தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை – ரயில் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்ததால் சுமார் ஒரு மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் வைகை அதிவிரைவு ரயில், இன்று காலை வழக்கம்போல் மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் நோக்கி சென்றது.

தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை – ரயில் போக்குவரத்து பாதிப்பு

அப்போது, தண்டவாளத்தில் பாறை உருண்டு கிடப்பதை கண்ட ரயில் ஓட்டுனர், விபத்து ஏற்படாதவாறு சாதுர்யமாக ரயிலை நிறுத்தினார். பின்னர் இதுகுறித்த ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், அப்பகுதி மக்கள் உதவியுடன் பாறையை அகற்றினர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வைகை அதிவிரைவு ரயில் புறப்பட்டு திண்டுக்கல் வந்தடைந்து.