வைகை அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு!

 

வைகை அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையில் நேற்று நீர்மட்டம் 41.98 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகரம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கன மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 தென் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1500 கனஅடி வீதம் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரை பாசனம், தொழிலுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Vaigai dam
இன்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் தொடர்ந்து 3 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட உள்ளது. முதல் நாள் வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதமும், 2-வது நாள் வினாடிக்கு 850 கனஅடி வீதமும், 3-வது நாள் வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.