சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் !

 

சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் !

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 24,405 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21லட்சத்து 72ஆயிரத்து 751ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று மட்டும் 460பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,665ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 96 லட்சத்து 19 ஆயிரத்து 198 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் !

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் அவர் கேட்டு தெரிந்துகொண்டார்.

சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் !

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. மதியம் 12 மணிவரை வியாபாரிகள், தொழிலாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு வணிக வளாகம் செயல்படும். முகக்கவசம் அணியாமலும், கூட்டம் அதிகமாக சேரும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கூறினார்.