லாரி சென்றுகொண்டிருக்கும்போது திடீரென இடிந்துவிழுந்த பாலம்! திக் திக் காட்சிகள்…

 

லாரி சென்றுகொண்டிருக்கும்போது திடீரென இடிந்துவிழுந்த பாலம்! திக் திக் காட்சிகள்…

உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகரில் உள்ள பெய்லி பாலத்தை லாரி ஒன்று கடந்துகொண்டிருக்கும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே உள்ள பெய்லி பாலத்தில் கனரக உபகரணங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. இதில் லாரி திடீரென உள்வாங்கி ஆழமான பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்து சென்ற உள்ளூர் இளைஞர்கள் உட்பட மீட்புக்குழுவினர் லாரியில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த இபத்தில் லாரி டிரைவர் உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலத்தை கடக்கும்போது லாரி விபத்தில் சிக்கிய இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.