உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி… பா.ஜ.க. அமைச்சர் பகீர் தகவல்..

 

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி… பா.ஜ.க. அமைச்சர் பகீர் தகவல்..

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலனா பா.ஜ.க. அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் மீது அம்மாநில அமைச்சர் சித்தார்த் நாத் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான சித்தார்த் நாத் கூறியதாவது: எதிர்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றது. அரசாங்கத்தை ஸ்திரமின்மை மற்றும் கவிழ்க்க குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் வெளியே வந்துள்ளனர். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி… பா.ஜ.க. அமைச்சர் பகீர் தகவல்..
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

அதன் விவரங்களை அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. சதிகாரர்களை விட முடியாது. ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் தகனம் அந்த பெண்ணின் குடும்பத்தின் சம்மத்துடன் நடந்தது. உ.பி. அரசு எதையும் மறைக்கவில்லை. சிபிஐ விசாரணைக்கு தயாராக உள்ளது. உண்மை வெளிவர வேண்டும். பிரமாண பத்திரம் உத்தர பிரதேச அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாங்கள் நிற்கிறோம்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி… பா.ஜ.க. அமைச்சர் பகீர் தகவல்..
பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் எரிப்பு

கல் எறிவது மற்றும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை முடக்குவதை சுதந்திரம் என்று அழைக்கிறீர்கள். அது துரதிருஷ்டவசமானது மற்றும் முழு அரசியல். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.