நாக்கை அறுத்து கூட்டு பாலியலுக்கு உட்படுத்தப்பட்ட இளம்பெண் மரணம்!

 

நாக்கை அறுத்து கூட்டு பாலியலுக்கு உட்படுத்தப்பட்ட இளம்பெண் மரணம்!

உத்திரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கடந்த 14 ஆம் தேதி அரங்கேறியுள்ளது இந்த கோர சம்பவம். ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், வயலில் புல் அறுத்துக்கொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த 4 பேர் பெண்ணின் துப்பட்டாவின் மூலம் அவரை தர தரவென இழுத்துச்சென்று கூட்டுப்பாலியல் செய்துள்ளனர். அப்போது அவர் சத்தம் எழுப்பக்கூடாது என்பதற்காக நாக்கையும் வெட்டியுள்ளனர்.

நாக்கை அறுத்து கூட்டு பாலியலுக்கு உட்படுத்தப்பட்ட இளம்பெண் மரணம்!

இதில் முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு செய்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டுமென டெல்லி மருத்துவமனை முன்பு தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.