உ.பி.யில் கட்டப்பட்ட கொரோனா மாதா கோவிலை இடித்தது மாவட்ட நிர்வாகம்

 

உ.பி.யில் கட்டப்பட்ட கொரோனா மாதா கோவிலை இடித்தது மாவட்ட நிர்வாகம்

உத்தர பிரதேசத்தில் கொரோனா மாதா என்ற கோவிலை அமைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ப்ரதாப்கர் மாவட்டத்தின் ஷுலாப்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் கொரோனா மாதா, முக கவசம் அணிந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

உ.பி.யில் கட்டப்பட்ட கொரோனா மாதா கோவிலை இடித்தது மாவட்ட நிர்வாகம்

இந்நிலையில் முக கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி, மஞ்சள் மலர்களையும், பழங்களையும் படைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறும் அந்த கோவிலின் அர்ச்சகர், ஏற்கனவே சின்னம்மை பாதிப்பு அதிகம் ஏற்படும் போது Chechak மாதா என்ற கோவில் ஏற்படுத்தப்பட்டதாக கூறினார்.

இந்நிலையில் கொரோனா மாதா கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகம், கோவிலை கட்டிய ஒருவரை கைது செய்தது