ஹத்ராஸில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்

 

ஹத்ராஸில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாமலேயே அவளது இறுதி சடங்கு அவளது சொந்த ஊரில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும், அம்மாநில காவல்துறையினருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து ஹாத்ராஸ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய 3 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹத்ராஸில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்

இந்நிலையில் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய 5 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்