வாழ்க்கையில் பெரும் செல்வம் சேரும் – உத்திரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

 

வாழ்க்கையில் பெரும் செல்வம் சேரும் – உத்திரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

சூரிய பகவானின் அம்சம் கொண்ட 2-வது நட்சத்திரம் உத்திரம் ஆகும். உத்திரத்தில் பிள்ளை பெற்றால் உறியில் சோறு என்று பழமொழி உள்ளது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களை நேசிப்பவராக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் பெரும் செல்வம் சேரும். மென்மையாக பேசக் கூடியவர்களாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு முன்கோபம் ஜாஸ்தி. மனதிடம் கொண்டவர்களாகவும் உண்மை பேசுபவர்களாகவும் இருப்பார்கள். வசீகரமான தோற்றமும், கட்டுக்கோப்பான உடலும் பெற்றிருப்பார்கள்.

வாழ்க்கையில் பெரும் செல்வம் சேரும் – உத்திரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களிடம் இனிமையாக பேசுவார்கள். பிறரிடம் குறைகளை கண்டால் நேரடியாக சொல்லி விடுவார்கள். உண்மையே பேசக் கூடியவர்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தடம் மாறாத குணம் கொண்டவர்கள். உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். இவர்களின் பேச்சாற்றலால் எதிரிகள் தடுமாறுவார்கள். இளமை வயதை காட்டிலும் 30 வயதுக்கு மேல் அதிக செல்வம், செல்வாக்கு இவர்களை வந்து சேரும்.