கஞ்சா விற்பனை செய்த 65 வயது மூதாட்டி கைது!

 

கஞ்சா விற்பனை செய்த 65 வயது மூதாட்டி கைது!

கொரோனா அச்சம் காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக மதுக்கடைகள் பல நாட்களாக மூடப்பட்டு சமீபத்தில் தான் திறக்கப்பட்டன. ஆனால் அதற்குள் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற துவங்கி விட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி அல்லிகுண்டம் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.

கஞ்சா விற்பனை செய்த 65 வயது மூதாட்டி கைது!

இதில் அய்யக்காள் என்ற 65 வயது மூதாட்டி வீட்டில் வைத்து கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 4500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் மூதாட்டி அய்யக்காளை கைது செய்தனர். மேலும் அவரிடம் இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.