சீனாவுடான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை…. உசுப்பேத்தும் டிரம்ப்….

 

சீனாவுடான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை…. உசுப்பேத்தும் டிரம்ப்….

இந்திய ராணுவம் லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சில பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் நேரடியாக கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் லடாக் எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்து வருகிறது.

சீனாவுடான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை…. உசுப்பேத்தும் டிரம்ப்….

இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல்நிலை நிலவுகிறது. இந்நிலையில் வழக்கம்போல், எல்லை பிரச்சினையில் இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தார். ஆனால் சீனாவுடான இருதரப்பு பிரச்சினையில் (எல்லை விவகாரம்) எந்தவொரு மூன்றாவது நபருக்கு இடமில்லை என மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. மேலும், லடாக்கில் சீன ஊடுருவல் பிரச்சினையை அமைதியாக தீர்க்க சீன தரப்புடன் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை…. உசுப்பேத்தும் டிரம்ப்….

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது டிரம்பிடம் இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா-சீனா இடையே பெரிய மோதல் போய்க்கொண்டு இருக்கிறது. இரு நாடுகளும் தலா 140 கோடி மக்களை கொண்டுள்ளது. இரு நாடுகளும் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளன. இந்தியா மகிழ்ச்சியாக இல்லை மற்றும் சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை. நான் உங்களுக்கு சொல்ல முடியும். நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். சீனாவுடன் நடக்கும் விஷயங்கள் குறித்து அவர் நல்ல மனநிலையில் இல்லை என அவர் தெரிவித்தார்.