அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

 

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

அமெரிக்க மக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றாமல் நடந்துவந்தால் விரைவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படும் அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கைகொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தாலும் மிகப்பெரிய அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இதனால் பலரும் வெளியே ஊர் சுற்றுவது, மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது என்று பல்வேறு இருந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கைஇது குறித்து அமெரிக்காவின் மருத்துவர் ஆன்டனி ஃபியூசி அமெரிக்காவின் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செனட் கூட்டத்தில் பேசும்போது, “அமெரிக்காவில் தற்போது ஒரு நாளைக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாசிடிவ் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்படும் நிலை விரைவில் வரும்.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கைதற்போது நடந்து வரும் தடுப்பு முறைகளில் திருப்தி இல்லை. தவறான பாதையில் நடந்து வருகிறோம். புதிய நோயாளிகள் எண்ணிக்கை வரைபடத்தை கவனித்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்த சரியான, உடனடி நடவடிக்கையை நாம் எடுக்கவில்லை என்று தெரிகிறது. மொத்தத்தில் கொரோனா தற்போது நம்முடைய கட்டுக்குள் இல்லை. நிச்சயமாக மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதை நாம் தடுக்காவிட்டால் மிகப்பெரிய பிரச்னைகள், வேதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.
அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 26 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு தங்கள் உயிரை இழந்துள்ளனர்.