சதயவிழாவில் தமிழ் வழியில் பூஜை நடத்த வலியுறுத்தல்

 

சதயவிழாவில் தமிழ் வழியில் பூஜை நடத்த வலியுறுத்தல்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-ஆம் ஆண்டு சதய விழாவின் போது, தமிழ் வழியில் பூஜை நடத்த வேண்டும் என தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடமுழுக்கு விழாவில் நடைபெற்றதை போன்று, சதயவிழாவிலும் பெருவடையார் கருவறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மந்திரங்களை சொல்லி பூசை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென, முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சதயவிழாவில் தமிழ் வழியில் பூஜை நடத்த வலியுறுத்தல்