ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

 

ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முதல்முறையாக சென்னையில் ஏலம் நடைபெறுகிறது. கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வேலைகளில் பிசிசிஐ மும்முரமாக இறங்கியுள்ளது.

ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

கடந்த வாரம் ஏலத்தில் இடம்பெற எத்தனை வீரர்கள் விருப்பம் தெரிவித்து பதிவுசெய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருந்தது. சச்சின் மகன் அர்ஜுன், கிரிக்கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்த ஸ்ரீசாந்த், சென்னை அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய் என 1114 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களைப் பதிவுசெய்திருந்தனர். தற்போது எந்த வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெறுவார்கள் என்ற பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. 292 பேர் கொண்ட பட்டியலில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

அந்தப் பட்டியலில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். ஸ்ரீசாந்த், முரளி விஜய் ஆகிய இருவரும் கழற்றிவிடப்பட்டுள்ளனர். லங்கா பிரிமியர் லீகில் ஜாஃப்னா அணிக்காக விளையாடிய ஈழத்தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. வலது கை லெக் ஸ்பின்னரான விஜயகாந்த்தின் ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

அதிகபட்ச ஆரம்ப விலையான ரூ.2 கோடி வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். ஸ்மித், ராய், பிளங்கட், ஷகிப் அல் ஹசன், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், மேக்ஸ்வெல் ஆகிய எட்டு வெளிநாட்டு வீரர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியாக இருக்கிறது. அதேபோல ரூ.1 கோடியில் ஹனுமா விகாரியும் உமேஷ் யாதவும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

தமிழக வீரர்கள் ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சித்தார்த் மணிமாறன், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், மொகமது இடம்பிடித்துள்ளனர். சமீபத்தில் சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணியில் இவர்கள் விளையாடியது கவனித்தக்கது.

ஐபிஎல் ஏலம்:இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்… கழற்றிவிடப்பட்ட ‘அந்த’ தமிழக வீரர்? அதிர்ச்சியில் ஸ்ரீசாந்த்!

மொத்தமாக எட்டு அணிகளுக்கு 61 வீரர்களே தேவைப்படும் பட்சத்தில் 292 வீரர்கள் இறுதிப்பட்டியலில் இருக்கின்றனர். எட்டு அணிகளில் பஞ்சாப் அணி மட்டுமே அதிகமான பணம் வைத்திருக்கிறது. மொத்தம் 9 வீரர்களை ஏலம் எடுக்க ரூ.53.20 கோடி வைத்திருக்கிறது. இதனால் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் ஏலம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு அணியின் பெயரை மாற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.