“முதலிரவுக்குள்ளேயே பிரிச்சிட்டாங்க ,பொண்டாட்டிய கடத்திட்டாங்க” -மச்சான் மீது மாப்பிள்ளை புகார்

 

“முதலிரவுக்குள்ளேயே பிரிச்சிட்டாங்க ,பொண்டாட்டிய கடத்திட்டாங்க” -மச்சான் மீது மாப்பிள்ளை புகார்


சகோதரியை காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரப்பட்ட தம்பி மாப்பிளையை தாக்கி அக்காவை தூக்கிக்கொண்டு போன சம்பவம் காதல் ஜோடிகள் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது .

“முதலிரவுக்குள்ளேயே பிரிச்சிட்டாங்க ,பொண்டாட்டிய கடத்திட்டாங்க” -மச்சான் மீது மாப்பிள்ளை புகார்


ராஜஸ்தானில் துங்கர்பூரில் வசிக்கும் ஹேமேந்திர பட்டிதர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராஜஸ்தானில் நிஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் . பின்னர் ஹேமேந்திரா தனது காதல் மனைவியோடு அகமதாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் வாழத் தொடங்கினார்.இதனை கேள்விப்பட்ட நிஷாவின் சகோதரர் முகேஷ் மற்றும் அவரது நண்பர் ரூப்லால் படேல் ஆகியோர் அஹமதாபாத்துக்கு சென்று அவரின் சகோதரியை மீட்டு வர முடிவு செய்தார் .
அதன்படி முகேஷ் மற்றும் அவரது நண்பர் ரூப்லால் படேல் ஆகியோர் அஹமதாபாத்துக்கு சென்று அவரின் சகோதரி நிஷாவையும் அவரின் கணவரையும் ஊருக்கு வருமாறு கூறி ஏமாற்றி ஒரு காரில் அழைத்து சென்றனர் .பின்னர் அவர்கள் போகும் வழியில் தனது சகோதரியின் கணவரையும் உடன் வந்த அவரின் உறவுக்கார சிறுவனையும் அடித்து உதைத்து காயப்படுத்தி காரிலிருந்து கீழே இறக்கிவிட்டனர் .பின்னர் தன்னுடைய சகோதரியை மட்டும் கடத்திக்கொண்டு ஓடி விட்டார்கள் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் ஹேமேந்திர அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய மைத்துனர் மீது புகார் கூறினார் .மேலும் தன்னுடைய காதல் மனைவியை மீட்டு தருமாறு கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தேடுவதாகவும், அவர்கள் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

“முதலிரவுக்குள்ளேயே பிரிச்சிட்டாங்க ,பொண்டாட்டிய கடத்திட்டாங்க” -மச்சான் மீது மாப்பிள்ளை புகார்