“முதலில் தாலி ,அப்புறம் ஜாலி,அப்புறம் …” -அடுத்து காதல் ஜோடிக்கு என்னாச்சி தெரியுமா ?

 

“முதலில் தாலி ,அப்புறம் ஜாலி,அப்புறம் …” -அடுத்து காதல் ஜோடிக்கு என்னாச்சி தெரியுமா ?

வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்ட ஒரு காதல் ஜோடியை கொலை செய்த உறவினர்களை பொலிஸ் கைது செய்தது .

“முதலில் தாலி ,அப்புறம் ஜாலி,அப்புறம் …” -அடுத்து காதல் ஜோடிக்கு என்னாச்சி தெரியுமா ?


பீகாரின் ஜாமுய் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 18 வயதான வாலிபரும் 15 வயதான பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .அவர்களின் காதல் அந்த பெண்ணின் உறவினர்களுக்கு பிடிக்கவே இல்லை .அதனால் அவர்கள் அந்த வாலிபரை கூப்பிட்டு தங்களின் மகளை மறந்து விடுமாறும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று பலமுறை மிரட்டினர் .அதனால் பயந்த அந்த ஜோடி அங்குள்ள கோவிலில் கடந்த வாரம் தாலி கட்டி கொண்டனர் .அதன் பிறகு அந்த ஜோடிகளின் திருமணத்தை பார்த்த ஒருவர் அந்த பெண்ணின் உறவினர்களிடம் இது பற்றி கூறினார்
அதனால் கோவப்பட்ட ந்த பெண்ணின் உறவினர்கள் அந்த கோவிலுக்கு விரைந்து வந்து அந்த காதலன் மற்றும் காதலி இருவரையும் கொலை செய்து விட்டனர் .பிறகு அவர்களின் உடலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டனர் .
மறுநாள் அந்த ஜோடிகள் தூக்கில் தொங்குவதை கண்ட ஊர் மக்கள் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் ..போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது அந்த காதல் ஜோடிகளை அந்த பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததை கண்டுபிடித்தனர் .இந்த கொலையை செய்த அந்த பெண்ணின் சகோதரர்கள் மீது ஏற்க்கனவே பல கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது .அதனால் போலிஸார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்