“பெண்ணாவே பொறக்குது ,மனசெல்லாம் கொதிக்குது” -பெற்ற மகளை கொன்ற அன்னை

 

“பெண்ணாவே பொறக்குது ,மனசெல்லாம் கொதிக்குது” -பெற்ற மகளை கொன்ற அன்னை


ஒரு பெண்ணுக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளதால் ,ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் தனக்கு பிறந்த 4 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்துவிட்டார் .

“பெண்ணாவே பொறக்குது ,மனசெல்லாம் கொதிக்குது” -பெற்ற மகளை கொன்ற அன்னை

பஞ்சாபின் லூதியானாவில் டிங்கு யாதவ் என்பவரின் மனைவி பிரியங்கா என்ற பெண்ணுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது .இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கடந்த ஆண்டு கர்ப்பமானார் .அதனால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆசையுடன் காத்திருந்தார்கள் .அந்த வீட்டிலுள்ள கணவர் மற்றும் மாமியார் உள்பட அணைவரும் அந்த பெண் இரண்டாவது முறை கர்ப்பிணியான நாள் முதல் ஆண் வாரிசை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகுந்தார்கள் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் பிரசவ வலியெடுத்து மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்த்தார்கள் .
அப்போது பிரசவ வார்டின் வாசலில் அனைவரும் ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது .அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள் . இதனால் அந்த பெண் இரண்டாவது பெண் குழந்தையுடன் வீட்டிற்கு வந்ததும் அவரை வரவேற்க்க கூட ஆளில்லை .இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த வாரம் ஒருநாள் தன்னுடைய நான்கு வயது பெண் குழந்தையை குளியறையின் சுவற்றில் அடித்து கொலை செய்து விட்டார் .இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்தார்கள் ..

“பெண்ணாவே பொறக்குது ,மனசெல்லாம் கொதிக்குது” -பெற்ற மகளை கொன்ற அன்னை