சிகிச்சை அளித்த செவிலியரிடம் சில்மிஷம்… உ.பி. இளைஞருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்…

 

சிகிச்சை அளித்த செவிலியரிடம் சில்மிஷம்… உ.பி. இளைஞருக்கு  தர்மஅடி கொடுத்த மக்கள்…

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற, உத்தரபிரதேச மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் ரென்சித். இவரது மனைவி அனிஷா(28). இவர் தேங்காய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அனிஷா மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, அங்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த கூலி தொழிலாளி லீலு(30) என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்தபோது, அனிஷாவுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சிகிச்சை அளித்த செவிலியரிடம் சில்மிஷம்… உ.பி. இளைஞருக்கு  தர்மஅடி கொடுத்த மக்கள்…

இதனால் அதிர்ச்சியடைந்த அனிஷா கத்தி கூச்சலிட்டார். இதனை கண்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று லீலுவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை, புதுக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு லீலு மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.