உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன் உறுதி

 

உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன் உறுதி

உத்தர பிரதேசத்தில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை வாரஇறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என முதல்வர் யோகி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

நம நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. உத்தர பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று லக்னோ உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 7 நாட்கள் லாக்டவுன் விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் லாக்டவுன் விதிக்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடையும் உத்தர பிரதேச வாங்கி விட்டது.

உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன் உறுதி
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்நிலையில் திடீர் திருப்பமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வாரஇறுதி லாக்டவுன் மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் விதிக்கப்படும்.

உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன் உறுதி
அவானிஷ் அவஸ்தி

உத்தர பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவானிஷ் அவஸ்தி கூறுகையில், ஏப்ரல் 23ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என்பதை உறுதி செய்தார். மேலும் லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.