“எங்களை சுட்டா உங்களுக்கு என்கவுன்ட்டர்தான் கதி “-எட்டு போலீசை சுட்ட ரௌடிகளை பழிக்கு பழி வாங்கிய போலீஸ்..

 

“எங்களை சுட்டா உங்களுக்கு என்கவுன்ட்டர்தான் கதி “-எட்டு போலீசை சுட்ட ரௌடிகளை பழிக்கு பழி வாங்கிய போலீஸ்..

கான்பூரில் கடந்த வாரம் எட்டு போலீஸ் அதிகாரிகளை சுட்ட விகாஸ் துபே இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு முன்னதாக தனித்தனியாக நடந்த துப்பாக்கி சூட்டில் உத்தரபிரதேச காவல்துறையினர் விகாஸ் துபேயின் இரு கூட்டாளிகளான பிரபாத் மிஸ்ரா மற்றும் பஹுவா துபே ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

“எங்களை சுட்டா உங்களுக்கு என்கவுன்ட்டர்தான் கதி “-எட்டு போலீசை சுட்ட ரௌடிகளை பழிக்கு பழி வாங்கிய போலீஸ்..ஹரியானா காவல்துறையினரால் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் மிஸ்ராவும் ஒருவர். அவரை போலீசார் ரிமாண்டில் ஃபரிதாபாத்தில் இருந்து கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது அவர் காவலில் இருந்து தப்பி ஓட முயன்றபோது பிரபாத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர்.அவர் வசமிருந்த ஆயுதங்களை போலீசார் மீட்டனர்

“எங்களை சுட்டா உங்களுக்கு என்கவுன்ட்டர்தான் கதி “-எட்டு போலீசை சுட்ட ரௌடிகளை பழிக்கு பழி வாங்கிய போலீஸ்..போலிஸ் வேனில் இவரை அழைத்து வந்தபோது வழியில் வேன் ரிப்பேர் ஆகி நின்றது ..அந்த நேரத்தில் பிரபாத் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி தாக்க தொடங்கினார் .அதனால் போலீசார் என்கவுன்டரில் அவரை சுட்டனர் .
மற்றொரு துபேவின் கூட்டாளியான பஹுவா துபே வியாழக்கிழமை (இன்று )காலை எட்டாவாவில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வசம் இருந்த ஆயுதங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
புதன்கிழமை, துபேயின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அமர் துபே, ஹமீர்பூரில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.