“சிறுமிகளுக்கு வலை வீசுவார்,ஆபாச படத்தை வலை தளத்தில் வீசுவார்”-பொறியாளரை பொறி வைத்து பிடித்த போலீஸ்

 

“சிறுமிகளுக்கு வலை வீசுவார்,ஆபாச படத்தை வலை தளத்தில் வீசுவார்”-பொறியாளரை பொறி வைத்து பிடித்த போலீஸ்


அரசாங்கத்தில் பொறியாளராக பணியாற்றும் ஒருவர் பல சிறுவர் சிறுமிகளின் ஆபாச படங்களை எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டு பல கோடிகள் சம்பாதித்துள்ளார் .

“சிறுமிகளுக்கு வலை வீசுவார்,ஆபாச படத்தை வலை தளத்தில் வீசுவார்”-பொறியாளரை பொறி வைத்து பிடித்த போலீஸ்


உத்திரபிரதேச மாநில சித்ரக்கூட்டில் வசிக்கும் , நீர்ப்பாசன துறையில் பொறியாளராக பணியாற்றும் ரம்பவன் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளாக பல சிறுவர் சிறுமிகளின் பாலியல் படங்களை எடுத்து அதை இணையதளத்தில் பதிவேற்றி பணம் சம்பாதித்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
அவர் உ.பி.யின் பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் மாவட்டங்களில் உள்ள பல சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் . அவர்களுக்கு இணைய தளத்தில் வலை வீசி ,ஆசை வார்த்தைகள் கூறியும் அவரின் இடத்திற்கு வரவைப்பார் .பின்னர் அவர்களின் பாலியல் படங்களை எடுப்பார் .அதன் பின் அந்த படங்களை பல வெளிநாட்டு வெப் தளத்திற்கு விற்று பல கோடிகளை சம்பாதித்துள்ளார் .
இந்த விஷயம் சிபிஐ க்கு தெரிய வந்தது .அதனால் அவரை பிடிக்க ஒரு பெரிய திட்டம் தீட்டப்பட்டது .அதன் படி அவரின் ஊடககணக்கு களை ஆராய்ந்த போலீசார் அவரை கடந்த வாரம் ஆதாரங்களுடன் கைது செய்தார்கள் .அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது .அதன் படி அவர் அரசாங்கத்தில் இஞ்சினியராக பணி புரிந்து கொண்டே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார் .கடந்த பத்து ஆண்டுகளாக 10 வயது முதல் 16 வயது சிறுவர் சிறுமிகள் 50 பேருக்கு மேல் இவரின் ஆபாச வலையில் வீழ்ந்துள்ளார்கள் .அவர்களின் ஆபாச படங்கள் டார்க் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது .அதன் மூலம் பல கோடிகளை அவர் ஈட்டியுள்ளார் .போலீசார் அவரின் வீட்டில் சோதனை நடத்தி பல தொழில் நுட்ப சாதனங்களை கைப்பற்றினார்கள் .

“சிறுமிகளுக்கு வலை வீசுவார்,ஆபாச படத்தை வலை தளத்தில் வீசுவார்”-பொறியாளரை பொறி வைத்து பிடித்த போலீஸ்