திருக்குவளையில் கருணாநிதி சிலை திறப்பு

 

திருக்குவளையில் கருணாநிதி சிலை திறப்பு

திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்துவைத்தார். கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம், தந்தை முத்துவேலர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆகியோரது சிலைகள் உள்ளன. அங்கே கருணாநிதியின் உருவச்சிலையை நிறுவ ஏற்பாடு நடந்து வந்தது. கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. காணொளி காட்சி மூலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சிலையை காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.