‘ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும்’ – சென்னை பல்கலை. முக்கிய அறிவிப்பு!

 

‘ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும்’ – சென்னை பல்கலை. முக்கிய அறிவிப்பு!

சென்னை பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும்’ – சென்னை பல்கலை. முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வரும் பிப்.8ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து விட்டது. அதன் படி, அண்ணா பல்கலைக்கழகம் வரும் பிப்.8ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கும் அடுத்தடுத்த மாதங்களில் பிற ஆண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

‘ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும்’ – சென்னை பல்கலை. முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் தொடரும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் ஆன்லைனில் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஜூன் மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பாடங்களில் சந்தேகம் இருந்தால் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.