மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு

 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு

இந்நிலையில் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளுங்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.