பா.ஜ.க.வுக்கு வாக்களித்து மம்தாவுக்கு ஷாக் கொடுங்க.. மேற்கு வங்க மக்களிடம் நிதின் கட்கரி வேண்டுகோள்..

 

பா.ஜ.க.வுக்கு வாக்களித்து மம்தாவுக்கு ஷாக் கொடுங்க.. மேற்கு வங்க மக்களிடம் நிதின் கட்கரி வேண்டுகோள்..

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து மம்தாவுக்கு கரண்ட் ஷாக் கொடுங்க என்று அம்மாநில மக்களிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதற்காக பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் என தனது கட்சியின் முக்கிய பிம்பங்களை மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் களம் இறக்கியுள்ளது. தற்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி அங்கு தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு வாக்களித்து மம்தாவுக்கு ஷாக் கொடுங்க.. மேற்கு வங்க மக்களிடம் நிதின் கட்கரி வேண்டுகோள்..
நிதின் கட்கரி

மேற்கு வங்கத்தில் ஜோப்பூரில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடந்த பேரணியில் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது: மே 2ம் தேதி மாற்றம் நிகழும். தாமரை வெற்றி பெரும். பா.ஜ.க. பெரும்பான்மை பெறும். மே 3ம் தேதி நம் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மே 4ம் தேதி பா.ஜ.க.வின் முதல்வர் பதவியேற்பார். இதனை யாராலயும் தடுக்க முடியாது.

பா.ஜ.க.வுக்கு வாக்களித்து மம்தாவுக்கு ஷாக் கொடுங்க.. மேற்கு வங்க மக்களிடம் நிதின் கட்கரி வேண்டுகோள்..
பா.ஜ.க.

மேற்கு வங்க மக்கள் மாநிலத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள். தேர்தல் நாளில் எழுந்து, தாமரையின் பட்டனை அழுத்துங்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். மம்தா ஜி நாற்காலியிலிருந்து இரண்டு அடி உயரும் அளவுக்கு ஷாக் கொடுங்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.