அவர் (முதல்வர் தாக்கரே) விரும்புவதை அவர் செய்வார், நான் விரும்புவதை நான் செய்வேன்… மத்திய அமைச்சர் ரானே

 

அவர் (முதல்வர் தாக்கரே) விரும்புவதை அவர் செய்வார், நான் விரும்புவதை நான் செய்வேன்… மத்திய அமைச்சர் ரானே

முதல்வர் உத்தவ் தாக்கரே அவர் விரும்புவதை செய்வார் அதேபோல் நான் விரும்புவதை நான் செய்வேன் என்று போலீசாரால் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானே பொடி வைத்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை ஒரு மாநில முதலமைச்சர் அறியாதது வெட்கக்கேடான செயல். அவர் உரையாற்றிய இடத்தில் நான் இருந்திருந்தால் தாக்கரேவின் கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்திருப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை போலீசார் கைது செய்தனர்.

அவர் (முதல்வர் தாக்கரே) விரும்புவதை அவர் செய்வார், நான் விரும்புவதை நான் செய்வேன்… மத்திய அமைச்சர் ரானே
முதல்வர் உத்தவ் தாக்கரே

போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லும் போது மத்திய அமைச்சர் நாராயண் ரானே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வீடியோ காலில் கூறியதாவது: நான் கோல்வால்கர் குருஜி ஆசிரமத்தில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தேன். மாலை 3 மணியளவில் ஒரு டிசிபி வந்து என்னை கைது செய்வதாக கூறினார். நான் நோட்டீஸ் (கைது உத்தரவு) கேட்டேன். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை என்று கூறி என்னை சங்கமேஸ்வர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். டிசிபி ஒரு அறைக்குள் சென்று 2 மணி நேரம் ஆகியும் வெளியெ வரவில்லை. காவல்துறை அதிகாரியிடமிருந்து என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தேன்.

அவர் (முதல்வர் தாக்கரே) விரும்புவதை அவர் செய்வார், நான் விரும்புவதை நான் செய்வேன்… மத்திய அமைச்சர் ரானே
நாராயண் ரானே

நான் உத்தவ் தாக்கரே அறைவேன் என்று சொல்லவில்லை. நம் நாடு சுதந்திரம் அடைந்த சரியான ஆண்டை அறியாத அவரை (உத்தவ் தாக்கரே) பற்றி நான் கருத்து தெரிவித்து இருந்தேன். நான் அங்கு இருந்திருந்தால், அவரை அறைந்திருப்பேன் என்று கூறியிருந்தேன். அவர் (முதல்வர் தாக்கரே) விரும்புவதை அவர் செய்வார், நான் விரும்புவதை நான் செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று மாலை நிலவரப்படி, மஹத் போலீசாரின் காவலில் மத்திய அமைச்சர் ரானே இருப்பதாக தகவல்.