உங்க புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?.. அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்க.. மத்திய அமைச்சர்

 

உங்க புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?.. அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்க.. மத்திய அமைச்சர்

அரசு அதிகாரிகள் உங்கள் புகார் மீது நடவடிக்கையை எடுக்கவில்லையா, மூங்கில் குச்சியால் அவர்களை அடியுங்க என பொதுமக்களிடம் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் அதிரடியாக பேசக் கூடியவர். அவர் பேச்சுகள் பல சமயங்களில் சர்ச்சையை கிளப்பிவிடும். தற்போது, அதிகாரிகள் உங்கள் குறைகளை கேட்கவில்லையென்றால் மூங்கில் குச்சிகளால் அடியுங்க என்று கிரிராஜ் சிங் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

உங்க புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?.. அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்க.. மத்திய அமைச்சர்
பா.ஜ.க.

பீகாரில் கோடவந்த்பூரில் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கிரிராஜ் சிங் பேசுகையில் கூறியதாவது: அதிகாரிகள் பெரும்பாலும் தங்களது புகார்கள் மீது சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்று பொதுமக்கள் அடிக்கடி என்னிடம் கூறுகின்றனர்.

உங்க புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?.. அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்க.. மத்திய அமைச்சர்
கிரிராஜ் சிங்

நான் அவர்களிம் கூறுகிறேன், ஏன் இது போன்ற சின்ன விஷயங்களுக்கு என்னிடம் வருகிறீர்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கிராம தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பி.டி.ஓ.க்கள் உள்பட இவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையில் உள்ளனர். அவர்கள் உங்கள் பேச்சை கேட்கவில்லையென்றால், உங்கள் இரண்டு கைகளால் மூங்கில் குச்சியை எடுத்து அவர்களின் தலையில் அடியுங்க. அது கூட வேலை செய்யவில்லை என்றால், கிரிராஜ் தனது அதிகாரத்தை உங்கள் பின்னால் இருந்து செயல்படுத்துவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.