12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

 

12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

தேர்தல் நடக்க இருக்கும் பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ள நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்ட கோவிட்-19 வழிகாட்டுதல்களில், அக்டோபர் 15ம் தேதி வரை எந்தவொரு மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்திலும் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 30ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
தேர்தல் பேரணி (கோப்பு படம்)

அதன்படி, தேர்தல் நடக்க இருக்கும் பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம். மேலும் இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம் கோவிட்-19 பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
தேர்தல்

மேலும், செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.