சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அனைத்து மொழிகளிலும் ரெடி – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அனைத்து மொழிகளிலும் ரெடி – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என எதிர்ப்பு எழுந்தது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அனைத்து மொழிகளிலும் ரெடி – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆகவே வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் மீனவ தந்தை கே.ஆர் செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் என்ற அமைப்பின் தலைவர் தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக தமிழ் மக்கள் ஆழமாக ஆய்வுசெய்ய தமிழில் வெளியிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. அதேபோல இதன் மீது கருத்துக்களை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அனைத்து மொழிகளிலும் ரெடி – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் அது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. வரைவு அறிக்கை குறித்த கருத்து கேட்பு விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து,கருத்து கேட்பு விரிவாக நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.