திமுகவில் இருந்து அதிமுகவுக்கு மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை!

 

திமுகவில் இருந்து அதிமுகவுக்கு மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை!

ஆண்டிப்பட்டி அருகே அதிமுகவில் இணைந்த ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை பகுதியில் மொத்தம் 14 வார்டுகள் இருக்கின்றன. அதில் 8ம் வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் தமிழ்செல்வன். தேர்தலின் போது, திமுக சார்பில் 7 பேரும் அதிமுக சார்பில் 7 பேரும் சமமாக வெற்றி பெற்றனர். திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெட்ரா தமிழ்செல்வன், அண்மையில் திடீரென அதிமுகவிற்கு மாறியுள்ளார்.

திமுகவில் இருந்து அதிமுகவுக்கு மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை!

திமுக, அதிமுக என அப்பகுதியில் இரண்டுமே சரிசமமாக இருந்த நிலையில், இவர் அதிமுகவில் இணைந்ததால் சேர்மன் பதவி அதிமுக வசம் சென்றுள்ளது. இந்த நிலையில் தான், தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதன் உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.