இருசக்கர வாகனம் மோதி, அடையாளம் தெரியாத நபர் பலி!

 

இருசக்கர வாகனம் மோதி, அடையாளம் தெரியாத நபர் பலி!

மதுரை

மதுரையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை – சிவகங்கை பிரதான சாலையில் உள்ள சீமான் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று பிற்பகல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, அவர் மீது மோதியது.

இருசக்கர வாகனம் மோதி, அடையாளம் தெரியாத நபர் பலி!

இதில், சாலையில் தூக்கிவீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மதுரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகன ஓட்டுநர் ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.