சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 

சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுவாணி மலை அடிவாரப்பகுதியில் உள்ள சாடிவயலை அடுத்த சர்க்கார்போர்த்தி பழங்குடியினர் கிராமத்தில் கடந்த 8 ஆம் தேதி 15 வயதான பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டது.

சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

உடல் மெலிந்து காணப்பட்ட இந்த யானை நீண்ட நாட்களாக உணவருந்தாமல் இருந்துள்ளதாகவும், வயிற்று வலியாலும் அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த 3 நாட்களாக உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இந்நிலையில் சிறுவாணி மலைஅடிவாரத்தில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கோவையில் கடந்த 8 மாதங்களில் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். யானையின் வயிற்று பகுதியில் நஞ்சு போன்ற ஒன்று காணப்பட்டதாகவும் அதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதும் தான் உண்மை விவரம் தெரிய வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.