உக்ரைன் அதிபரின் மனைவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி

 

உக்ரைன் அதிபரின் மனைவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி

கிவ்: உக்ரைன் நாட்டு அதிபரின் மனைவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலினாவுக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆனால் அதிபருக்கும், அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

“எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று தெரியவந்தது. எதிர்பாராத செய்தி. நானும் எனது குடும்பத்தினரும் முகமூடிகள், கையுறைகள், குறைந்தபட்ச தொடர்புகள் என்று அனைத்து கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுகிறோம்.” என்று ஒலினா கூறியுள்ளார்.

இருப்பினும் தான் நன்றாக இருப்பதாக உணர்வதாக ஒலினா கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒலினா சேர்க்கப்படவில்லை. தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி உள்ளதாக கூறினார். உக்ரைனில் 870 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். அந்நாட்டில் 29,753 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.