கைதான 7 மணி நேரத்திற்கு பிறகு உதயநிதி விடுவிப்பு

 

கைதான 7 மணி நேரத்திற்கு பிறகு உதயநிதி விடுவிப்பு

இன்று மாலை அனுமதியின்றி பரப்புரையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. மு.க ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தற்போது பரப்புரை செய்து வருகிறார். அரசின் உத்தரவை மீறி கடந்த 2 நாட்களாக பரப்புரை நடத்தி வரும் உதயநிதியை ஆங்காங்கே போலீசார் கைது செய்து வருகின்றனர். திருக்குவளையிலும், நாகை துறைமுகத்திலும் அவர் பிரச்சாரம் நடத்திய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் பரப்புரை செய்த உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.

கைதான 7 மணி நேரத்திற்கு பிறகு உதயநிதி விடுவிப்பு

இந்நிலையில் இரவு 10 மணி ஆகியும் உதயநிதியை போலீசார் விடுதலை செய்யாததால் அவர் அடைத்துவைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினருடனான கடும் வாக்குவாதத்திற்கு பின் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் விடுவித்தனர்.