வெள்ளி வேல்-ஐ ஏந்தினார் உதயநிதி ஸ்டாலின்!

 

வெள்ளி வேல்-ஐ ஏந்தினார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவருவதையடுத்து மக்களை கவர அவரவர் ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தவகையில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் முதன்முதலில் கையில் எடுத்தது வேல் யாத்திரை. அதன்பின் முக. ஸ்டாலின் கையில் வேல் ஏந்தினார். தொடர்ந்து சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேல்- ஐயும் தேர்தலுக்காக பங்குப்போட்டுவருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வேல்- ஐ கையில் ஏந்தினார்.

வெள்ளி வேல்-ஐ ஏந்தினார் உதயநிதி ஸ்டாலின்!

இந்நிலையில் பழனியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு தொண்டர்கள் வெள்ளி வேல்-ஐ பரிசாக வழங்கினர். அவர் வேலுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களப்பணியில் அதிரடியாக களமிறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.